Megame Megame (From "Paalaivana Cholai")

மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே

மேகமே...

தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?
பாவையின் ராகம் சோகங்களோ?
பாவையின் ராகம் சோகங்களோ?
நீரலை போடும் கோலங்களோ?

மேகமே...

தூரிகை எரிகின்ற போது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ?...

மேகமே...



Credits
Writer(s): R Vairamuthu, Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link