Azhaipaya Azhaipaya - Reprise

விழுந்தேனா தொலைந்தேனா
நிறையாமல் வழிந்தேனா
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்

கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே
இங்கே உன் இன்மை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா
என்றெண்ணி இருதயம் துடிக்குதே

அழைப்பாயா அழைப்பாயா
நொடியேனும் அழைப்பாயா
பிடிவாதம் பிடிக்கின்றேன்
முடியாமலே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன்
விடியாமலே அழைப்பாயா

நான் என்ன பேச வேண்டும்
என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும்
என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்
ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும்
என்று கூட சேர்த்தேன்

நிலைமை தொடர்ந்தால்
என்ன நான் ஆகுவேன்
மறக்கும் முன்னே அழைத்தால்...
பிழைப்பேன்...

அழைப்பாயா அழைப்பாயா
அலைபேசி அழைப்பாயா
தலைகீழாய் குதிக்கின்றேன்
குரல் கேட்கவே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன்
உனைப் பார்க்கவே அழைப்பாயா...

ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்ட மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே வேற் ஏதோ நேருதே...

அழைப்பாயா அழைப்பாயா
தவறாமல் அழைப்பாயா
தவறாக அழைத்தாலும்
அது போதுமே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
அழைப்பாயா அழைப்பாயா
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே
அது போதுமே அழைப்பாயா... ஆஅ...



Credits
Writer(s): Sai Srinivas Ghantasala, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link