Dhaham (From "Enakkaga Kaathiru")

தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்
தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்

மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்

இமயம் பனிமலர் சூடும்
விழியில் கனவுகள் ஆடும்
இதயம் முழுவதும் நாதம்
இது தான் சங்கம மாதம்

பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓ நனைந்த பூவே
தேவன் வந்தான் கொண்டாடுங்கள்
சத்தம் இன்றி பண்பாடுங்கள்
இனி நான் ஆடும் நீரோடை தேனோடை ஆகும் தானே

தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்

பனிகள் உருகிடும் ஓசை
பேசும் மன்மத பாஷை
இமைகள் துடித்திடும் ஓசை
இதயத்தின் ரகசிய பாஷை

காதல் அமுதமா இல்லை விஷமுமா
இல்லை அமுத விஷமா
கண்ணுக்குள்ளே தூக்கம் இல்லை
காதல் சொல்ல நாக்கும் இல்லை
இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்

தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்
மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link