Chinna Nenjile

சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை
இன்பமாய்த் துன்பம் செய்குது
துன்பமாய் இன்பம் செய்குது
ஆளிலாமலே பேசத்தோணுது
ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றது
இதற்குப் பேர் காதல் என்பதா

சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை


ஒற்றைச்சிறகு கொண்டே
சுற்றிப்பார்க்கும் கிளிபோல்
தத்தை நெஞ்சு தத்தளிக்குதே
தூங்கும்போது விழிக்கும்
நான் விழித்தபின்பும் கனவு
வயசு என்னை வம்புசெய்யுதே

மாலைநேரம் வந்தால் என் மனதில் நாணமில்லை
மார்பில் உள்ள ஆடை என் பேச்சைக் கேட்கவில்லை
இதயக்கூடையில் பூக்கள் நிறையுதா
இதற்குப் பேர் காதல் என்பதா

சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை

லாலலாலலா லலாலலாலலா
லலாலலா லலாலலாலலா

மனசில் மையம் தேடி
புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையைக் கடக்குமோ
கடலில் அலைகள் போலே
என் உடலில் அலைகள் தோன்றி
கும்மிகொட்டிக் கொந்தளிக்குமோ

என்ன நேரும் என்று என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதுமில்லை
என்னைக் கொல்வதா இளைய மன்மதா
இதற்குப் பேர் காதல் என்பதா

சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை



Credits
Writer(s): Vairamuthu, Anoop Rubens
Lyrics powered by www.musixmatch.com

Link