Mandhaara (From "Bhaagamathie")

மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா

மந்தாரா மந்தாரா
குரலுதும் மந்தாரா
குழலேறி காதில் சென்றாரா

கிளையினில் தாவும் காகம்
இலையினை நீரில் போடும்
அதை அறியாமல் ஓடும் நிலை உணர்வாயா

உன்னை அறியாமல் நீயும்
இவள் மண ஓடை மேலே
ஒரு இலை வீசி போனாய் உயிர் படர்வாயா

ஓ பொல்லாத மேகம் பூக்கும்
என்னோடு போரிட பார்க்கும்
இனி என்னாகுமோ
மலர் மண்ணாகுமோ
அதை ஏந்தி கொள்வாயா

மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல் தந்தாரா

மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில் சென்றாரா

மந்தாரா
சிங்காரா
கள்ளரா
ரீங்கரா

ஆஹ மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா

விதவிதமாக பொய்களை அள்ளி
மனதினில் பூசி மறைத்தேனே
நிஜங்களை காட்டும் விளம்பரமாக
சிரிப்பினை இதழில் இணைத்தேனே

உன்னை வந்து சேரும் ஆசை
உயிரினில் ஏறும் ஓசை
முதல் முதலாக கேட்டேன் உன்னை அடைவேனா

பெண்ணோடு ஏனோ மோதல்
உண்டாக்குதே உன் காதல்
நீ தினம் தரும் உயிர் கலவரம்
கலைக்காமல் நின்றேனா

மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல் தந்தாரா

மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில் சென்றாரா

மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா



Credits
Writer(s): Thaman Ss
Lyrics powered by www.musixmatch.com

Link