Sorgam Madhuvile (From "Sattam En Kaiyil")

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே

மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா
திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அணைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில் எனை மூழ்கி களிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்



Credits
Writer(s): Kannadhasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link