Kadhal Enpathu

அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு வெளியே குதித்துவிடும்
கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா
அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும்
இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும்
போதிலும் காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே
பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே
ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும் கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா
கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும்
காதல் மிருகம் என்பது ரத்தம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது
மீண்டும் மிருகம் தூங்கவே காடா மலையா கேட்குது
இடுப்பில் உன் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது
மிருகம் தவிக்குதே வழி சொல்லவா
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா
மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க அது தூங்கி போகும் அல்லவா
கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு வெளியே குதித்துவிடும்
கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா



Credits
Writer(s): Na Muthukumar, Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link