Sevvaanam

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

கண்ணால உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடை கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

பொன்னுடல் தன்னை என் கையில் ஏந்த
என்னடி யோசிக்கிறாய்
மொத்தத்தில் காதலின் எடை என்னையாகும்
இப்படி சோதிக்கிறாய்

நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

செண்பகப் பூவின் மடல்களை திறந்து
தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை சொல்லி
என்னை பார்ப்பதென்ன

பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

கண்ணால உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ

கண்ணால உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ



Credits
Writer(s): Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link