Kasthuri Maane (From "Pudumai Penn")

கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது
கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

ஆஅஅஅஆஅஆஅ
ஆஹாஆஆஆஅஆஹ
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஆஅ

கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு

பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்
அருந்த நேரம் சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்
அருந்த நேரம் சொல்லு

பெண்மையே பேசுமா
பெண்மையே பேசுமா
மெளனம்தான் பள்ளியறை மந்திரமா

கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

ஆஅஅஅஆஅஆஅ
ஆஅஅஅஆஅஆஅ
ஆஅஅஅஆஅஆஅ
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஆஅ

ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்
என்னை ஏதேதோ செய்கின்றதே
வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்
இங்கே தேன் மாரி பெய்கின்றதே

என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
நடந்து போகின்றதே

நாணமே போனது
நாணமே போனது
போதுமே ஆளை விடு
ஆடை கொடு

கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது
கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு



Credits
Writer(s): Ilaiyaraaja, V Senthil Nathan
Lyrics powered by www.musixmatch.com

Link