Kayilae Aagasam (From "Soorarai Pottru")

கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

தூங்கி இருந்த கேணிலும் பால் சுரக்க கூடும்மையா
தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ
உச்சி வெயில் வேளையில உந்த வரும் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ

கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

அன்னத்த தட்டுல வெச்சு அம்புலிய காட்டி நின்ன
தாயுமே நிலவ நெருங்க பொறந்தது காலம்
கன்னத்துல கைய வெச்சு காத்திருந்த சனகளும்தான்
பல்லக்குல ஏறி போக மறஞ்சது சோகம்
பல்லக்குல ஏறி போக மறஞ்சது சோகம்

தண்டட்டியில் காகங்கள ஓட்டி நின்ன பாட்டிகளும்
தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி
கிட்டடியில் மேகங்கள தொட்டு விடும் ஏக்கத்தில
கட்டான் தரைகளுமே போடுது போட்டி



Credits
Writer(s): Premkumar Paramasivam, Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link