Velliangiri Malai Vasa

வெள்ளிங்கிரி மலை வாசா
நெஞ்சில் அருள்மழை பொழிந்திடும் ஈசா
மலையேறி உன்திரு சந்நிதி வந்தால்
துன்பங்கள் பறந்திடும் தூசா

வெள்ளிங்கிரி மலை வாசா
நெஞ்சில் அருள்மழை பொழிந்திடும் ஈசா
மலையேறி உன்திரு சந்நிதி வந்தால்
துன்பங்கள் பறந்திடும் தூசா

உள்ளமே கோயிலாய் தேவா
எங்கள் இன்னிசை மனம் வீசும் பூவா
தென்திசை நோக்கிய தேவா
உன்னை அன்பினால் அழைக்கிறோம் வாவா

வெள்ளிங்கிரி மலை வாசா
நெஞ்சில் அருள்மழை பொழிந்திடும் ஈசா
மலையேறி உன்திரு சந்நிதி வந்தால்
துன்பங்கள் பறந்திடும் தூசா

பணிந்திடும் ஐம்பெரும் பூதம்
போற்றி புகழினை பாடிடும் வேதம்
உடுக்கையில் பிறந்தது நாதம்
நாங்கள் பற்றி நின்றோம் திருப்பாதம்

பணிந்திடும் ஐம்பெரும் பூதம்
போற்றி புகழினை பாடும் வேதம்
உடுக்கையில் பிறந்தது நாதம்
நாங்கள் பற்றி நின்றோம் திருப்பாதம்

உலகெல்லாம் உண்ணருள் ஆட்சி
தென்கைலாயம் மலையதன் மாட்சி
உயிருக்குள் உயிரான சாட்சி
கண்ணில் விருந்தாகும் உன்திருக்காட்சி

வெள்ளிங்கிரி மலை வாசா
நெஞ்சில் அருள்மழை பொழிந்திடும் ஈசா
மலையேறி உன்திரு சந்நிதி வந்தால்
துன்பங்கள் பறந்திடும் தூசா

குருநாதர் அறுள்மழைக்கேங்கினோம்
ஆதியோகியை உள்மூச்சில் வாங்கினோம்
திருவடியை நெஞ்சில் தாங்கினோம்
எங்கள் வல்வினை யாவையும் நீங்கினோம்

குருநாதர் அறுள்மழைக்கேங்கினோம்
ஆதியோகியை உள்மூச்சில் வாங்கினோம்
திருவடியை நெஞ்சில் தாங்கினோம்
எங்கள் வல்வினை யாவையும் நீங்கினோம்

வாழ்த்திஉண் நாமத்தைப் பாடி
வந்தோம் ஏழுமலை ஏறி
ஆனந்தம் பொங்கிட ஆடி வந்தோம்
ஐயா உந்தன் அருளைதான் நாடி

வெள்ளிங்கிரி மலை வாசா
நெஞ்சில் அருள்மழை பொழிந்திடும் ஈசா
வெள்ளிங்கிரி மலை வாசா
நெஞ்சில் அருள்மழை பொழிந்திடும் ஈசா

மலையேறி உன்திரு சந்நிதி வந்தால்
துன்பங்கள் பறந்திடும் தூசா
மலையேறி உன்திரு சந்நிதி வந்தால்
துன்பங்கள் பறந்திடும் தூசா
மலையேறி உன்திரு சந்நிதி வந்தால்
துன்பங்கள் பறந்திடும் தூசா



Credits
Writer(s): Sounds Of Isha
Lyrics powered by www.musixmatch.com

Link