Irai Thandha

இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
மறையாத ஒளி நீயே
மடி மீது துயில்வாயே
உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விட மாட்டேன்
இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
தவமாய் தவமிருந்து
பலநாள் சுமந்திருந்து
உதித்தது ஒளிவிளக்கு
உனதன்னை வயிற்றினிலே
வலி எதும் கொடுக்காமல்
வலி கண்டு பிறந்த பிள்ளை
வெளிவந்த பின்னாலே
விடிந்தது என் உலகு
உறவே நீ இருந்தால்
போதும் போதும்
உயிரே என் உயிராய்
ஆகும் ஆகும்
இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் ஒளி நீயே
என்னை நினைப்பதில்லை
என்றும் உன் நினைவு
முன்னைப் பிறவி தொட்டு
முடிந்தது நம் உறவு
உனக்கேதும் இல்லை கண்ணா
உனை விட்டு நான் பிரியேன்
எனக்கென ஏதும் இல்லை
என்னுயிரை நான் மறவேன்
இறைவன் எனக்களித்த
ஜீவன் ஜீவன்
என்றும் என்னுடன்
ஒன்றாகும் ஆகும்
இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விட மாட்டேன்
இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
உயிர் நீயே உயிர் நீயே



Credits
Writer(s): Gangai Amaran, Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link