Kan Thoora

இலையில்லா மரத்தில் நிழல் தேடினேன்
பிழை கண்ட கணமே எழுந்தோடினேன்
நானும் ஒலி கேட்கா செவியில் இசை பாடினேன்
வலி அறிந்த பின்பும் ஏன் அதை நாடினேன்?

யாரும் இல்லை என்றேன்
சோகம் கை தந்ததே
ஆரும் காயம் எல்லாம்
வாசல் முன் வந்ததே

கண் தூறா கண்ணீரும் காயம் கூறும்
வாய் பேசா பொம்மை நான் நாட்கள்தோறும்
கால் கட்டிய பினமாய் இருந்தேன் எந்நாளும்
கை காட்டும் திசை எல்லாம் திரை போட்டதேன் நானும்

இலையில்லா மரத்தில் நிழல் தேடினேன்
பிழை கண்ட கணமே எழுந்தோடினேன்
நானும் ஒலி கேட்கா செவியில் இசை பாடினேன்
வலி அறிந்த பின்பும் ஏன் அதை நாடினேன்?



Credits
Writer(s): Subhashini Ganesan
Lyrics powered by www.musixmatch.com

Link