Kadavulum Naanum

கடவுளும் நானும் பேசிடும் பொழுது
நடுவினில் நடுவினில் தரகர்கள் எதற்கு?
கடவுளும் நானும் பேசிடும் பொழுது
நடுவினில் நடுவினில் தரகர்கள் எதற்கு?

எதிலும் இருப்பவனை
வாவென்றால் வருபவனை
கல்லுக்குள் பூட்டிவைத்து
கும்பிடச் சொல்வது
எவ்வித நியாயமோ?

கடவுளும் நானும் பேசிடும் பொழுது
நடுவினில் நடுவினில் தரகர்கள் எதற்கு?

சோதிடம் பார் என்பார்
காசு நீ வீசென்பார்
நான் செய்த பாவங்கள்
கழுவிட வழிச்சொல்வார்

சோதிடம் பார் என்பார்
காசு நீ வீசென்பார்
நான் செய்த பாவங்கள்
கழுவிட வழிச்சொல்வார்

பூக்களைக் கொய்வானேன்?
பூசைகள் செய்வானேன்?
நெருக்கத்தில் இருப்பவனை
நெரிசலில் காண்பானேன்?

பூக்களைக் கொய்வானேன்?
பூசைகள் செய்வானேன்?
நெருக்கத்தில் இருப்பவனை
நெரிசலில் காண்பானேன்?

கடவுளும் நானும் பேசிடும் பொழுது
நடுவினில் நடுவினில் தரகர்கள் எதற்கு?

எனக்குள்ளே அவன் இருக்க
எனக்குள்ளே அவன் இருக்க
அவனுக்குள் நான் இருக்க
எனக்குள்ளே அவன் இருக்க
அவனுக்குள் நான் இருக்க
அவன் விழி நான் அறிய
என் மொழி அவன் அறிய
உடலெனும் அகலினில்
உயிரெனும் திரியில்
அவன் எனில் எரிய
ஒளி என நிறைய

கடவுளும் நானும் பேசிடும் பொழுது
நடுவினில் நடுவினில் தரகர்கள் எதற்கு?
கடவுளும் நானும் பேசிடும் பொழுது
கடவுளும் நானும் பேசிடும் பொழுது



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, K King Simon, Rajiv Menon
Lyrics powered by www.musixmatch.com

Link