Adi Penne - Reprise

அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும், இறகைப் போல பறக்கிறேன்!
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்! (பிறக்கிறேன்)

விடியும் வானம், இரவைப் பிரிந்து
வாழ்ந்த காதல் தெரியுமோ?
பறவை தனது பாதை மறந்து
பறந்த தூரம் திரும்புமா?
ஓ, காதல் வாசம் தொலைந்து போனால்
பூக்கள் யாவும் உதிருமா?
என் உயிரின் பாதி, பிரிந்து போனால்
விதியின் நீதியும் நீயடி!

பெண்ணே!, உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
கனாத காதல் நீ தந்தது!
உன் காதல் யாவும், நான் ஏந்தி கொள்ள
என் நெஞ்சம்தானே போராடுது!

ஹ்ம்ம்ம்-ஹ்ம்ம்ம்

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா?
உன் மடி சாயவா?

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா?
உன் மடி சாயவா?

அடி பெண்ணே!, ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்!
அடி பெண்ணே!, ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்!



Credits
Writer(s): Stephen Zechariah, Suria Velan
Lyrics powered by www.musixmatch.com

Link