Uyiril Pookkum Kaadhal

உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை

காவல் கைதியாய்
காதல் வாழும்
இருவரும் மீதிலும்
இல்லை ஓர் பாவம்

எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை

மனம் என்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே

நதி வழி போனால்
கரை வரக் கூடும்
விதி வழி போனானே
விதை ஒன்று போட
வேறொன்று முளைத்த
கதையென்று ஆனானே

என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட
நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப் போலே நட்பை பார்த்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல்
உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சயதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு

ஒரு புறம் தலைவன்
மறு புறம் தகப்பன்
இருகொல்லி எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்

யார் காரணம் யார்
யார் பாவம் யாரைச்சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன்
சுற்றம் செய்த குற்றம் தானே

உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை

காவல் கைதியாய்
காதல் வாழும்
இருவரும் மீதிலும்
இல்லை ஓர் பாவம்

எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை



Credits
Writer(s): Vaalee, Sundar C Babu
Lyrics powered by www.musixmatch.com

Link