Unakkaaga Vazhgiren

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீ மலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீ மலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

விழியாலே தாங்குவேன்
இமையாலே போர்த்துவேன்
நீ ஒளியாக வாழவே
மெழுகாக மாறுவேன்

நீ நடந்து வரும்
பாதையின் மேல் முள்ளிருந்தால்
அன்பே என் கண் இமைகள், உனைத்தாங்கும்
நீ வசித்திருக்கும்
வீட்டின் மேல் மழையடித்தால்
உனக்காக என் சுவாசம், குடையாகும்

நீ சிந்தும்
துளி கண்ணீரும்
என் உள் நெஞ்சில்
வந்து முள் கீறும்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீ மலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

என் நெஞ்சமே
உன்னைதான் தாங்குமே
என் சுவாசமே நீ தானே
என் கண்களின்
ஈரத்தில் பூக்கவா
என் நட்பெல்லாம் நீயல்லவா

உன் முகம் சோர்ந்தாலே
அதிலே என் உயிர் துடிக்காதா
உன் மனம் அழுதாளே
உடனே என் விழி நனையாதா
அன்பின் பயணத்தில் ஓ... கண்ணீர் வார்த்தைகள்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீ மலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீ மலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

விழியாலே



Credits
Writer(s): Pa. Vijay, Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link