Deivanbin Vellamae

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே

செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா, நின் அடி பணிந்தேன்
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா, நின் அடி பணிந்தேன்

சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?

புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்
ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்

மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே

மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ
மகிமையோ, வருங்காலமோ
மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ
மகிமையோ, வருங்காலமோ

பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே

செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா, நின் அடி பணிந்தேன்
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா, நின் அடி பணிந்தேன்

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே



Credits
Writer(s): Llewellyn Samuel
Lyrics powered by www.musixmatch.com

Link