Neethaane Naaldhorum (Male Vocals)

அன்று இட்ட தீ முப்புரத்திலே
கொன்று அழித்தது தீய சக்தியை
இன்று இட்ட தீ இப்புரத்திலே
என்ன தான் செய்யுமோ ஆதி சக்தியே

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
இளமை காலம் தொடங்கி
எந்தன் முதுமை காலம் வரையில்
இசைக்கும் கீதம் தனியே
இன்று இருப்பதென்ன சிறையில்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

தூது சொல்லவும் செய்தி சொல்லவும்
நாதி இன்றி நானே
பாடுகின்றதை காதில் கேட்குமோ
பொறியில் வீழ்ந்த மானே

காதல் என்பதே பாவம் என்பதாய்
தீர்ப்பு சொன்னது யாரோ
தூய காதலை தூர தள்ளியே தீயை மூட்டுவாரோ
வஞ்சிப் பூவும் வாழுமோ
இல்லை தீயில் வேகுமோ
மர்ம நியாயம் பேசிடும் தெய்வம் ஊமை ஆகுமோ
கண்மணி பொன்மணி
இங்கு நான் அங்கு நீ
நானும் நீயும் ஒன்றாய் சேரும் நேரம் வாராதோ

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

கோவில் இல்லையோ தெய்வம் இல்லையோ
கொண்ட துன்பம் தீர்க்க
ஈரம் இல்லையோ நெஞ்சம் இல்லையோ
நம்மை ஒன்று சேர்க்க

காவல் நின்றிடும் கடவுள் யாவுமே
கண்கள் கொண்டு பார்க்க
காலம் தாண்டினால் யாரிடத்தில் நான்
காதல் பிட்சைக் கேட்க

தெய்வம் காக்க வேண்டியே
கையை நானும் ஏந்தினேன்
திக்கு ஏதும் இன்றியே
துன்ப ஆற்றில் நீந்தினேன்

இன்னும் ஏன் தாமதம்
தீர்க்க வா சஞ்சலம்
காக்கும் கைகள் வந்தே இங்கே
கண்ணீர் துடைக்காதோ

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
இளமை காலம் தொடங்கி
எந்தன் முதுமைக் காலம் வரையில்
இசைக்கும் கீதம் தனியே
இன்று இருப்பதென்ன சிறையில்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link