Thirukarathal

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே



Credits
Writer(s): Sweeton, Paliyar Nanban
Lyrics powered by www.musixmatch.com

Link