Aasai Magane

ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி

கரிச காட்டு கள்ளியிலே
நீ மொளைச்சவண்ட
உன்ன கல் சுமந்தாச்சும்
படிக்க வைப்பான் உன் அப்பன்டா

வெட்டருவா வேணாம் வேல்கம்பும் வேணாம்
கத்தியெல்லாம் தூரபோட்டு புத்தைகத்தை தூக்கு

ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி

ஆட்டு ஈரல் சுட்டுத்தாரேன்
அச்சு வெல்லம் தொட்டுத்தாரேன்
நாட்டு கோழி சாறு எறக்கி
நல்லெண்ணெய்யும் ஊத்தித்தாரேன்
புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தும்
புத்திக்குள்ள சேரணுமே
நீ பொன்னு மெடல் வாங்கணுமே

உனக்கு வந்த புகழால்
எனக்கு முறுக்கு மீசை ஏறனுமே
ஊர் கிறுக்கு பிடிச்சு போகணுமே
மகனே உன் உச்சந்தலையில்
எண்ணெய் வச்சி தேக்கிறேன்டா
மகனே உன் படிப்புக்காக
என்னை நானே தேக்கிறேன்டா

நீ சுடச்சுட சுடச்சுட படிடா
நீ சூரியனை எழுப்பி விடுடா
நீ சுடச்சுட சுடச்சுட படிடா
நீ சூரியனை எழுப்பி விடுடா

அன்பு மகன் வாழ்க ஆறும் ஊரும் வாழ்க
உன் ஐ எ எஸ் ஓரத்தில் அப்பன் பேரும் வாழ்க

ஆசை மகனே ஆசை மகனே எந்திரிநாளை நீதான்டா மந்திரி
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி

காட்டு வெயிலில் பஞ்சம் பொழச்சோம்
கலப்பை வித்து கஞ்சி குடிச்சோம்
எருமை தயிரு சோறு போட்டு
உன்ன மட்டும் ஊட்டி வளத்தோம்
மொத்தம் எல்லாம் செலவழிச்சாலும்
மிச்சம் இருப்பது நீ அல்லவா
நீ வெதைக்கு வச்ச நெல் அல்லவா

நாட்டரங்காலில்
நான் உன்ன விதைச்சேன்
நாளை விளைச்சல் நீயல்லவா
நீ நாட்டுக்கெல்லாம் உணவல்லவா

மழை பார்க்கும் மானாவாரி
வருஷம் ஒரு நாள் விளையுமடா
மழைக்கால இரவும்கூட
மறு நாள் நிச்சயம் விடியுமடா

நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா
அந்த சரஸ்வதி வருவா வாடா
நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா
அந்த சரஸ்வதி வருவா வாடா

அன்பு மகன் வாழ்க ஆறும் ஊரும் வாழ்க
உன் ஐ எ எஸ் ஓரத்தில் அப்பன் பேரும் வாழ்க

ஆசை மகனே ஆசை மகனே எந்திரி
நாளை நீதான்டா மந்திரி

கரிச காட்டு கள்ளியிலே
நீ மொளைச்சவண்ட
உன்ன கல் சுமந்தாச்சும்
படிக்க வைப்பான் உன் அப்பன்டா

வெட்டருவா வேணாம் வேல்கம்பும் வேணாம்
கத்தியெல்லாம் தூரபோட்டு புத்தைகத்தை தூக்கு



Credits
Writer(s): Deva, R Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link