Chandiran Oliyil Avalai Kanden

சந்திரனொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரியங்களை வென்று விட்டேன்
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்

சந்திரனொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரியங்களை வென்று விட்டேன்
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரிலாதெனைச் செய்து விட்டாள்
துன்பமென்பதைக் கொய்து விட்டாள்
துயரிலாதெனைச் செய்து விட்டாள்
துன்பமென்பதைக் கொய்து விட்டாள்

சந்திரனொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரியங்களை வென்று விட்டேன்
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்
வான்கணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்

சந்திரனொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரியங்களை வென்று விட்டேன்
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்



Credits
Writer(s): Subramania Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link