Vaalththoli Mulakkum

தசரத மாமன்னருக்கே, ஜெய்
தசரத மாமன்னருக்கே, ஜெய்
தசரத மாமன்னருக்கே, ஜெய்
தசரத மாமன்னருக்கே, ஜெய்
தசரத மாமன்னருக்கே, ஜெய்
தசரத மாமன்னருக்கே, ஜெய்
தசரத மாமன்னருக்கே, ஜெய்
தசரத மாமன்னருக்கே

வாழ்த்தொலி முழக்கும் நெஞ்சங்கள் துடிக்க
வாழ்க்கையில் இறுதி பயணம் நடக்க
ஒரு உடல்கூடு, அதில் உயிர் வாழ்ந்து
வந்தது போலவே போய்விடும் ஓர் நாள்
வந்தது போலவே போய்விடும் ஓர் நாள்

எங்கே இருந்தோ இங்கே வந்தோம்
அங்கே மீண்டும் போகின்றோம்
வானும் புகழ, வாழ்ந்த தசரதர் மேல்
பூவை தூவுகின்றார் மக்கள்
வானும் புகழ, வாழ்ந்த தசரதர் மேல்
பூவை தூவுகின்றார் மக்கள்

தோளில் தூக்கி வளர்த்த தந்தையை
தோளில் சுமந்து வந்தனர் மைந்தர்கள்
மாளிகை மன்னரின் மடியினில் தவழ்ந்த
மைந்தரின் சோகம் அறிவாரோ?
மாளிகை மன்னரின் மடியினில் தவழ்ந்த
மைந்தரின் சோகம் அறிவாரோ?

தீயை மூட்டிட ராமன் இல்லையே
யாரிடம் போவார் விடைகேட்க?
தசரதன் விதியை தடுப்பவர் யாரே
நடப்பது இறைவன் நாடகமே
தசரதன் விதியை தடுப்பவர் யாரே
நடப்பது இறைவன் நாடகமே

வாழ்க்கை என்பது பொய்தானா?
வந்தவர் போவது நிஜம்தானா?
யாருக்குமே இந்த நிலைதானா?
இங்கு, ஜனனமும் மரணமும் சொந்தங்களா?
யாருக்குமே இந்த நிலைதானா?
இங்கு, ஜனனமும் மரணமும் சொந்தங்களா?
இங்கு, ஜனனமும் மரணமும் சொந்தங்களா?

வந்தவர் எல்லாம் போவது ஏனோ?
பூமியில் இடமே போதாதென்றோ?
சொந்தமும் பந்தமும் நிலையாதென்பதை
ஓடும் நதியே சொல்கிறதோ?
சொந்தமும் பந்தமும் நிலையாதென்பதை
ஓடும் நதியே சொல்கிறதோ?



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link