Yaedhaedho Sila Yaekkangal

ஏதேதோ சில ஏக்கங்கள்
எனை அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

காலை வந்தாய்
மாலை வந்தாய்
கனவுகளோடு இரவிலும் வந்தாய்
உனது வருகையில் மனது தொலைய

ஏதேதோ சில ஏக்கங்கள்
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

வீட்டில் இருந்தாலும்
வீதியையே விழி பார்க்கிறதே
நீ வருவாய்
என இதயம் பார்க்கிறதே
உனை பேசிடவே சுகம் கூடிடுதே
நேரமும் ஓடாதே
விழி காட்டிடவும் பயம் ஆகிடுதே
தூங்கவும் தோணாதே

ஏதேதோ சில ஏக்கங்கள்
எனை அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

யாரும் என்னை கண்டால்
நீயாய் எண்ணத் தோன்றும்
நாளும் செய்கிறாய் மாயங்களே
பசி என்றுமே பொறுக்காதவள்
உனை எண்ணியே இளைத்தேனடா
ருசி என்பதே உனதன்பு தான் அடடா

ஏதேதோ சில ஏக்கங்கள்
எனை அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

காலை வந்தாய் (காலை வந்தாய்)
மாலை வந்தாய் (மாலை வந்தாய்)
கனவுகளோடு இரவிலும் வந்தாய்
உனது வருகையில்
மனது தொலைய



Credits
Writer(s): Premkumar Paramasivam, M.s. Jones
Lyrics powered by www.musixmatch.com

Link