Amizhdhe Nee

அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன்
குமிலே நீ நடந்திட நிலவை வைத்தேன்
குழிகள் ஏன் மறந்துவிட்டேன்

பிழையாய் ஒரு அடி எடுத்தேன்
உன் உறக்கத்திலே பொன் கனவுடைத்தேன்

இனிமேல் கண் அழுதிட துளி இல்லையே
விதை மேல் கல் விழுவது முறை இல்லையே
தவறை நான் திருத்திட வழி இல்லையே
பறவை கை வரவில்லையே

வியர்வை தணிக்க புயல் தான் கொடுத்தேன்
தாகம் தணிக்க கடல் தான் கிழித்தேன்
அழுதிட என் விழி நான் மீட்டுவேன் உயிரே

அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட மனம் பதைத்தேன்
குமிலே நீ நடந்திட நிலவை வைத்தேன்
குழிகள் ஏன் மறந்துவிட்டேன்

பிழையாய் ஒரு அடி எடுத்தேன்
உன் உறக்கத்திலே பொன் கனவுடைத்தேன்



Credits
Writer(s): Vivek, Abdul Wahab Sayyed Hesham
Lyrics powered by www.musixmatch.com

Link