Anbin Devane

அன்பின் தேவனே
உம்மை நோக்கி பார்க்கின்றேன்
என் நாளெல்லாம்
உம்மை துதிப்பேன்
என் வாழ்வில் யாவையும்
நீர் தந்து நடத்துகின்றீர்
என் வாழ்வெல்லாம் உம்மை நினைப்பேன்

தொலைந்துப்போன
என்னைத் தேடி
வந்தது உம் கிருபையே
இருளான வாழ்வை
வெளிச்சமாக்கித் தந்தது
உம் கிருபையை
தகுதி இல்லா என்னையும்
கண்டது உன் கிருபையே
சிலுவையில் இரத்தம் சிந்தி
மீட்டது உம் கிருபையே

நான் கண்ணீர் சிந்தும்போது
உம் வார்த்தையால் அணைத்தீர்
உம் அன்பை நான்
என்ன சொல்லுவேன்
மனிதர் என்னைக் கண்டு
ஏளனமாய் சிரிக்கும்போது
பேரிரக்கத்தால் மூடிக்கொண்டிர்

என்னென்ன நேர்ந்தாலும்
தாங்கி நிற்பதும் கிருபையை
நான் வழி மாறிப் போனாலும்
மீட்டு கொள்வதும் கிருபையே
குயவனே உம் கையிலே
என்னையே நான் தருகின்றேன்
எண்ணில்லா நன்மை செய்தீர்
உம்மையே என்றும் துதிப்பேன்

என் கால்கள் இடறும் போது
உம் பேரன்பினால்
என்னை தாங்கி நடத்தி வந்தீர்
என் பலவீனத்திலே
உம் பெலன் போதுமென்றீர்
உம் கிருபையால் என்னை நிறைத்தீர்

என் வாழ்வின் பெருமையெல்லாம்
உம் பாதம் வைக்கிறேன்
நான் சிறுகவும்
நீர் பெருகவும்
என்று உம்மையே உயர்த்துவேன்
உம் அன்பை எடுத்துச் செல்வேன்
உம் கிருபை எடுத்துச் சொல்வேன்
உமக்காக யாவும் ஏற்பேன்
பரலோக வாழ்வில் சேர்வேன்

கிருபையால் என்னைக் கண்டீரே
உம் அன்பினால் என்னை மீட்டீரே
இயேசுவே நீர் போதுமே என்றுமே
கிருபையால் என்னைக் கண்டீரே
உம் அன்பினால் என்னை மீட்டீரே
இயேசுவே நீர் போதுமே என்றுமே
கிருபையால் என்னைக் கண்டீரே
உம் அன்பினால் என்னை மீட்டீரே
இயேசுவே நீர் போதுமே என்றுமே

Written By: Bernard Praveen Kumar [Praveen BNT]



Credits
Writer(s): Praveen Kumar S
Lyrics powered by www.musixmatch.com

Link