Vaanam Umadhu

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
சர்வத்தையும் படைத்தவரே
உம்மை துதிப்பேன்
விண்மீன்களை எல்லாம்
பெயர் சொல்லி அழைப்பவரே
உள்ளங்கையில் என்னை
வரைந்து வைத்தீரே

காலம் மாறினாலும்
நீர் என்றும் மாறவில்ல
உலகமே அழிந்தாலும்
உன் வார்த்தை என்றும் அழிவதில்ல

என் வாழ்வினிலும் தாழ்வினிலும்
உம்மை துதிப்பேன்
என் வெற்றியிலும் தோல்வியிலும்
உம்மை துதிப்பேன்
என் உயிரும் நீரே
ஊற்றும் நீரே
வாழ்வும் நீரே
வழியும் நீரே
என் தாயும் நீரே
தந்தையும் நீரே
மேய்ப்பரும் நீரே
மீட்பரும் நீரே

அதிசயங்கள் செய்பவரே
அற்புதங்கள் தருபவரே
பரிசுத்தமானவரே
உம்மை துதிப்பேன்
உம் பெயரை சொன்னாலே
பேய்கள் எல்லாம் ஓடிடுமே
நோய் நொடிகள் எல்லாமே
மறைந்து போகுமே

எல்லாவற்றிற்கும்
மேலாக இருப்பவரே
எண்ணில்லா நன்மைகளை
என் வாழ்வில் தந்தீரே

என் வாழ்வினிலும் தாழ்வினிலும்
உம்மை துதிப்பேன்
என் வெற்றியிலும் தோல்வியிலும்
உம்மை துதிப்பேன்
என் உயிரும் நீரே
ஊற்றும் நீரே
வாழ்வும் நீரே
வழியும் நீரே
என் தாயும் நீரே
தந்தையும் நீரே
மேய்ப்பரும் நீரே
மீட்பரும் நீரே

யூத ராஜ சிங்கம் அவர்
மேகம் மீது வந்திடுவார்
கரம் அசைத்து மார்போடு
சேர்த்துக்கொள்வாரே
கால்கள் யாவும் முடங்கிடும்
நாவு யாவும் போற்றிடும்
இயேசுவே தெய்வம்
என்று சொல்லிடுவோமே

உலகின் நியாயத் தீர்ப்பு
அந்நாளில் வந்திடுமே
பரிசுத்தமானோரை
தம்மோடு சேர்ப்பாரே

இனி காலமெல்லாம் ஆர்ப்பரித்து
உம்மை துதிப்பேன்
ஆனந்தமாய் துதி கீதம்
என்றும் பாடுவேன்
என் உயிரும் நீரே
ஊற்றும் நீரே
வாழ்வும் நீரே
வழியும் நீரே
என் தாயும் நீரே
தந்தையும் நீரே
மேய்ப்பரும் நீரே
மீட்பரும் நீரே
என் ஆசை நீரே
பெலனும் நீரே
பொக்கிஷம் நீரே
ராஜா நீரே
என் நண்பரும் நீரே
அன்பரும் நீரே
தேவன் நீரே
எல்லாம் நீரே

Written By: Bernard Praveen Kumar [Praveen BNT]



Credits
Writer(s): Praveen Kumar S
Lyrics powered by www.musixmatch.com

Link